பத்தாவது படிக்கும் போது பசி வந்து வேலையா இருந்த அம்மாவை தொணப்பி அடி வாங்கினபோது.
ஜாக் ஆப் ஆல் ட்ரேட்ஸ்! மாஸ்டர் ஆப்? ஹிஹிஹி
கதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு! அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
5
விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: பொது
¨ஆமாம். இவ்வளவு நாட்களும் உங்களுடன் வந்து கொண்டு இருந்தவர்தான். அடிகளாரை தூக்கியும் போனவர்தான். உம் ஆகட்டும்.¨ மஞ்சு திரும்பி நடந்து குகையின் ஒளிக்குள் மறைந்தார்.
வாலை ஆட்டிக்கொண்டு வழிகாட்டின நாயை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே அனைவரும் பின் தொடர்ந்தனர்.
முன்னம் அவர்கள் பிரிந்த இடத்துக்கு வரவும் குமரனும் வனிதாவும் நிரம்பிய தோள் பைகளுடன் விவாதித்து கொண்டே வரவும் சரியாக இருந்தது. ¨போகலாமா!¨ என்ற கேட்டு விட்டு மீண்டும் அவர்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது கீழே இறங்குவதாக இருந்ததாலும் மனம் நிறைவாக இருந்ததாலும் எல்லாரும் விரைவாகவே இறங்கத்தொடங்கினர். மஞ்சுவை காணாததைக்கூட குமரனோ வனிதாவோ கவனிக்கவில்லை.
நான்கு நாட்களில் உலகமே எப்படி மாறிப்போய்விட்டது? முன்பு இதை பார்த்தாலே வெறுப்பு மேலோங்கியது. இப்போதோ எதைப்பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரு கம்ஃபாஷன்தான் வருகிறது. முதலில் அம்மாவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ள தயார்ன்னு சொல்லணும். எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! ஓ! நான் இந்தியா வந்து இருகிறதே கூட அவங்களுக்கு தெரியாதே. திடீரென்று எதிரே போய் நிற்கலாமா? வேண்டாம். அப்பாவுக்கு கொஞ்சம் பிபி. ஏதாவது ஆகிவிடக்கூடும்.
முன் எப்போதும் இல்லாத நிம்மதியை இப்போது உணர்ந்தான் சங்கர்.
அடிகளார் மனம் நிச்சலனமாக இருந்தாலும் ஆதர்ச சிஷ்யனை பிரிந்துவிட்டோமே என்ற ஆதங்கம் கொஞ்சம் தலைத்தூக்கத்தான் செய்தது. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டாரே குரு! குரு? ஆமாம். நித்தியிடம் சொன்னபோது நம்மை அறியாமலே சத்தியமான வார்த்தைகள் வந்து விழுந்தன. பிரியும் போது கூட நித்தி அழவே இல்லையே! எவ்வளவு வைராக்கியம் வந்துவிட்டது! தன் மேல் வைத்த மதிப்பை அப்படியே சித்தரிடம் திருப்பி விட்டுவிட்டான். எப்போ வருவானோ? எப்போது நான் பொறுப்பில் இருந்து விடுபடுவேனோ! ம்ம்ம்ம்ம்... அட, நம் மடத்துக்கு ரொம்ப மதிப்பு வைத்து இருக்கும் மதுரை ஆடிட்டரை மறந்து போனோமே! சில மாதங்கள் முன் வந்து ஏதோ பேச முற்பட்டபோது கூட, நேரம் சரியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். முதலில் அவரை கூப்பிடச்சொல்லி பேச வேண்டும்...சிந்தனை தொடர்ந்தது.
வள்ளி ஒரு வழியா நம்ம முருகன் வழி காட்டிட்டான் பாத்தியா!
ஆமாங்க. முதல்ல கீழே இறங்கினதும் அவனுக்கு ஒரு அபிசேகம் செஞ்சுட்டு போகலாம்.
அடுத்து எந்த டாக்டரை..
யாரையும் பாக்க வேணாங்க. மஞ்சு எனக்கு அப்பப்ப ஏதோ பச்சிலை எல்லாம் கொடுத்து வந்தா. எனக்கும் ஏனோ சாப்பிடணும்னு தோணிச்சு. ஆயாசம் நீங்கத்தான் கொடுக்கிறா ன்னு நினைச்சேன். அது வேறன்னு இப்ப தோணுது. உடம்பே இப்ப வித்தியாசமா இருக்கு. லேசா....கனமே இல்லாம... என் தம்பியை சொத்துக்கு ஆசை படறான்னு நினைச்சு வீணா விலக்கி வெச்சு இருந்தோமே அது தப்புன்னு தோணுது. கூப்பிட்டு பேசணும்.
எல்லோருக்கும் இப்போது ஏதோ நினைவு மங்கியது. புதிய எண்ணங்கள் வந்தன. புதிய கண்ணோட்டங்கள்...
ஆகா இப்படி ஒரு அழகான முருகன் கோவில் இந்த மலையில்! நாள் போனதே தெரியவில்லையே! யாரையும் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் ஒரு நிம்மதி வந்துவிட்டதே! தம் காரியம் இனி நன்றாக நடக்கும் என்று ஒரு நம்பிக்கையும் வந்துவிட்டது.
குமரனும் வனிதாவும் இன்னும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தோள் பை நிறைய பலவித தாவரங்கள். பூக்கள், இலைகள்.. .. எது புதுசு? எது பழசு.? இதில் கருத்து வேறுபாடு நிறையவே இருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களைப்பற்றி ஒரு நினைவே கூட இல்லாமல்.....
சுமார் இரண்டு மணி நேரத்தில் கீழே இறங்கிவிட்டார்கள். மேலே போகும்போது நான்கு நாட்கள் ஆயிற்றே! இப்போது இரண்டு மணி நேரம்தானா என்ற எண்ணம் சங்கர் மனதில் மட்டும் ஒரு கணம் தோன்றி மறைந்தது.
ஒரு டவேரா வந்து நின்றது. ¨அக்கா! அக்கா!¨ என்று உரக்க கூவியபடி ஒருவர் இறங்கி ஓடி வந்தார். ¨பத்து நாளா எங்கே போய்விட்டீங்க? நாங்க படாத பாடு பட்டுட்டோம். அக்கம் பக்கம் தேடாத இடமில்லை.¨
¨பத்து நாளா?¨
¨பின்ன, உங்க ட்ரைவர் காரை ரிப்பேர் பாத்து திரும்பி வந்து பத்து நாள் ஆகப்போகுது. இங்கே பக்கத்திலே ஒரு கிராமத்திலே இருப்பீங்கன்னு சொல்லி போனீகளாம். அங்க கேட்டா யாருக்கும் தெரியலே! என்ன செய்யிறதுன்னு தெரியாம எங்கிட்ட வந்தான். நானும் ரெண்டு நாள் பொறுத்து பாத்திட்டு வண்டில இங்கேயே சுத்தி சுத்தி வரென். சொல்லிட்டு போக்கூடாதா? சரி வாங்க போலாம்.¨
¨இவங்களையும் பக்கத்து ஊரிலே விட்டுடலாம்பா. நாங்கள்லாம் ஒண்ணா இந்த மலையிலே ஒரு முருகன் கோவிலுக்கு போய் வந்தோம்.¨
¨பக்கத்து ஊர் என்ன? எங்கே போகணுமோ அங்கேயே விட்டுடலாம். உங்களை திரும்ப பாத்ததுல இப்ப எவ்வளொ நிம்மதியா இருக்கு.¨
அனைவரும் வண்டியில் ஏறினர்.
மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் சிரிப்பது போல இருந்தது. அது நம் பிரமையாகதான் இருக்க வேண்டும். நாய் எங்காவது சிரிக்குமா என்ன? அது புலியாக மட்டும்தான் மாறும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
11
விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: தொடர் கதை
¨இவள் யார்? உங்கள் வழி காட்டிதான்! வேறு யாரும் இல்லை.¨ என்ற குரல் கேட்டது.
மஞ்சு கம்பீரமாக எழுந்து நின்று முதன் முறையாக குழுவினரை நேருக்கு நேர் பார்த்தாள்.
சக்தி வாய்ந்த கண்கள் ! ஏன் இவ்வளவு நாட்கள் யாரையும் நேரே பார்க்கவில்லை என்பது புரிந்தது. பார்த்திருந்தால் அவற்றின் சக்தி இது சாதாரண பெண் இல்லை என்று அடையாளம் காட்டி இருக்கும்!
இப்போது குரல் அவளது வாயிலிருந்தே வருகிறது என்பது புரிந்தது.
¨ஐந்து நாட்களாக உங்களுடனேயே இருக்கிறேனே! மௌனியை தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தால் அவரை அங்கேயே நிறுத்தி தேவையானதை செய்துவிட்டு வந்தேன். அவருக்கு உபதேசம் ஆகிவிட்டது. சமாதிக்கு போய்விட்டார்! சில காலம் சென்ற பின் இந்த மலையில் உலவும் பல சித்தர்களில் அவரும் ஒருவராகிவிடுவார். நித்திக்கு கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் சிரமப்பட்டே அவன் கவனத்தை திருப்ப வேண்டி இருந்தது.¨
யாருக்கும் ஒரு பேச்சும் எழவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர் நம்மிடையே ஒருவராக பழகி உலாவிக்கொண்டு இருந்தாரா? பிரமிப்பே ஏற்பட்டது. அனவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
¨திருப்பி இங்கே...¨
¨திருப்பி இங்கே நீங்கள் வர முடியாது. இந்த இடம் கொஞ்சம் வித்தியாசமானது. உலகின் சாதாரண விதிகள் இங்கு செல்லுபடியாகாது. நீங்கள் திரும்பி இங்கே வருவது தேவையானால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த இடம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே வித்தியாசமாக ஆகிவிடும். திருப்பி இங்கே வந்தால் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது. அதைப்பற்றி கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையானது சரியான சமயத்தில் யார் மூலமாகவோ வந்து சேரும். இந்த மலையின் அடிவாரத்துக்கு போவதற்குள்ளேயே இங்கே நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு மறந்துவிடும். தேவையானது மட்டுமே நினைவில் இருக்கும்.¨
¨ஏன் அப்படி?¨
மஞ்சு சிரித்தார். அப்புறம் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் கூட இங்கே வரத்தோன்றும். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கத்தோன்றும். கவலைப்படாதீர்கள் தேவையான நேரத்தில் ஏதோ ஒரு நபர், விஷயத்தின் மூலம் உங்களுக்கு எப்போதும் வழி காட்டப்பட்டுவிடும்.¨
¨ நித்தியானந்தம், இங்கேயே கொஞ்சம் நேரம் இரு. சிலர் வந்து உன்னை அழைத்து போவார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்! போய் வாருங்கள். நிறைவான வாழ்க்கை வாழுங்கள்! நேரம் ஆகிவிட்டது. குமரனும் வனிதாவும் வந்து விடுவார்கள். சீக்கிரம் போங்கள்!¨
¨அவர்களுக்கு... ¨என்று இழுத்த சங்கரை இடைமறித்தார் மஞ்சு. ¨அவர்களுக்கு அவர்கள் தேடி வந்தது கிடைத்துவிட்டது. யார் யார் எதை தேடுகிறார்களோ அதுதானே கிடைக்கும்? அவர்களால் ஒன்றும் பிரச்சினை வராது. இதோ இந்த நாயை தொடர்ந்து போங்கள். சீக்கிரமே கீழே போய்விடலாம்.¨
நாய்?
இப்போது அவர்கள் கண் எதிரே புலி முன்னம் அவர்களுடன் வந்து கொண்டு இருந்த நாயாக மாறியது.
திகைப்புக்கு மேல் திகைப்பு!
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
2
விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: தொடர் கதை
¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨
¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
¨ஏன்?¨
¨என் குருவை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன்.¨
நிறைவான சிரிப்பொலி கேட்டது.
¨இனி உனக்கும் உன் குருவுக்கும் கூட இப்போது பேசுவது கேட்கும். அந்த மடத்தைப்பற்றிதான் உனக்கு தெரியுமே? மிகவும் பெயர் பெற்றது. நான் சொன்னபடி செய்தால் அந்த மடத்து பொறுப்பு உனக்கு வந்து சேரும். நிறைய பொருளும் கிடைக்கும், ஊரார் உன்னை மதித்து கொண்டாடுவார்கள். இந்த நாட்டிலேயே, ஏன் உலகிலேயே சிறந்த ஆன்மீகவாதி என்ற பெயர் கிடைக்கும். நான் சொல்கிறபடி செய்யாது போனால் இத்தனையும் இழப்பாய்!¨
¨என்ன வேண்டுமானாலும் இழந்துவிட்டு போகிறேன். என் குருவை விட்டு போக மாட்டேன்.¨
¨நித்தியானந்தம்! உன்னைப்போல குரு பக்தி கொண்டவரை பார்ப்பது அரிது. உனக்கு என்று சில வேலைகள் காத்து இருக்கின்றன. நாட்டில் மக்கள் அரசியல் மீது நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிறார்கள். அராஜகம் பெருகிவிட்டது. இனி ஆன்மீகம் ஒன்றே அவர்களுக்கு நம்பிக்கையை தரும். அப்போதுதான் அவர்களால் முழு சக்தியுடன் வேலை செய்து விளங்க முடியும். இந்த மறு மலர்ச்சி உன்னால்தான் நிகழ வேண்டும் என்பது இறைவன் சித்தம். அதற்கு மறுப்பு சொல்லாதே.¨
¨மாட்டேன்!!¨ என்றான் நித்தி உறுதியாக.
¨நித்தி அடியேன் சொல்கிறேன். இவர் நம் குரு பரம்பரையில் மிகவும் மூத்தவர். அதனால் இவர் சொல்வதை தட்டக்கூடாது.¨
¨குருவே உங்களைத்தவிர எனக்கு யாரையும் தெரியாது.¨
¨அப்படியானால் நான் சொல்வதை கேட்பாயல்லவா? நான் உத்திரவு போடுகிறேன். இவர் சொல்வது போல இனி நடந்து கொள்ள வேண்டும். என்ன யோசிக்கிறாய்? இனி இவர் என்ன சொன்னாலும் அதை நான் சொல்வதாகவே நினைக்க வேண்டும்.!¨
ஒரு நிமிட மௌனத்துக்குப்பின் ¨குருவே அப்படியானால் சரி. உங்கள் ஆணையை மீற மாட்டேன்!¨ என்றான் நித்தி.
¨ஆகட்டும். நேரம் ஆகிவிட்டது. நீங்கள் கிளம்பலாம்.¨
¨ஐயா எங்களுக்கு வழி காட்டி உதவிய இந்த பெண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்!¨ என்றான் சங்கர்.
கலகல என்ற சிரிப்பொலி கேட்டது
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
1 விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: தொடர் கதை
¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.
¨ஐயா! எனக்கு புத்தி வந்துவிட்டது. மக்களை மிகவும் இனம் பிரித்துக்கொண்டு இருந்தேன். ஜனங்களை இனம் பிரிப்பது அவரவர் வேலையை ஒழுங்காக செய்ய மட்டுமே என்று புரியாமல் இருந்தேன். அதனால் ஒரு அகந்தை இருந்தது. சாதாரண எளிய ஜனங்கள் மீது அதனால் ஒரு அலட்சியம் இருந்தது. இவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்தேன். காட்டுவாசிகள் எனக்கு வைத்தியம் பார்த்த பின்னரே இவர்களுக்கு நிறையவே தெரியும். எல்லாத்துக்கும் மேலே அன்பு காட்ட தெரியும் என்று புரிந்து கொண்டேன். என்னை எல்லா பொறுப்பிலிருந்தும் விடுவித்து தவம் செய்ய விடுங்கள்!¨ என்றார்.
¨சச்சிதானந்தம்! குரு சொன்னதை அப்போதே நிறைவேற்றி இருந்தால் இந்த தொல்லை உமக்கு வந்து இருக்காது. போகிறது. உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுக்க வேண்டு. காலம் கனிய வேண்டும்.¨
¨எத்தனை சமூக தொண்டுகள் செய்கிறேன்? எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் குருவே? ¨
¨சமூக தொண்டு செய்ய எத்தனையோ நிறுவனங்கள். அவற்றுக்கு உதவி செய்யலாம். ஆன்மீகத்தை கவனிக்கத்தான் ஆளில்லை. அதை செய்யுங்கள். அதுதானே உங்கள் வேலை? மக்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று ஏதாவது கொடுக்க கொடுக்க மக்கள் அதை வாங்கிக்கொண்டு மேலும் மேலும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பர். அவர்களை சோம்பேறிகள் ஆக்க வேண்டாம். அவர்களுக்கு இறை உணர்வுடன் உழைக்க கற்றுக்கொடுங்கள். உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். பெற்றதை பகிர்ந்து கொள்ள சொல்லிக்கொடுங்கள். பண்பை சொல்லிக்கொடுங்கள்!¨
¨எதற்காக மடங்கள் இருக்கின்றன? ஆன்மீகத்தை கட்டிக்காக்கத்தானே! மக்களை நல்வழி படுத்தத்தானே! இந்த முக்கிமான காரியத்துக்கு உதவத்தான் அத்தனை சொத்தை இறைவன் கொடுத்தான். செலவுக்கு கவலை படாமல் ஆன்மீக தொண்டு செய்வதற்கு செல்வந்தர்கள், மன்னர்கள் நிலபுலன்கள் கொடுத்தார்கள். எப்போது அந்த நோக்கத்தில் இருந்து விலகி போயிற்றோ அப்போது மடங்களும் தார்மீக சக்தியை இழக்கும். அடிகளே , மடங்கள் செய்ய வேண்டிய காரியங்களை நடத்தாவிட்டால் அந்த சொத்துக்களும் கைவிட்டு போகும். பிரச்சினைகள்தான் அதிகமாகும் ஆன்மீகம் காணாமல் போய் சொத்தை நிர்வாகம் செய்வதிலேயே நேரம் போனால் எப்படி?
¨ இறைவன் மீதும் குருவின் மீதும் நம்பிக்கை வைக்காமல் நீதி மன்றங்கள் மீதும் ஆட்சியாளர் மீதும் ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்?
மட நிர்வாகத்தின் நுணுக்கங்களை அதற்காக இருக்கிற நபர்களிடம் விட்டுவிடுங்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை சூழ்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகும். பொருளைப்பற்றி கவலைப்படாமல் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையான பொருளை இறைவன் தானே அனுப்புவான். மக்களை நல்ல வழிக்கு திருப்ப என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வழி தானே தெரிய வரும். மக்களிடம் அன்பு காட்டி முன்னுதாரணமாக இருங்கள்.¨
¨ நித்தியானந்தம் இங்கேயே இருக்கட்டும். அவனுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அவன் வந்து சேர்ந்தபின் அவனுக்கு பட்டம் கட்டிவிட்டு அவனிடம் பொறுப்புக்களை கொடுத்துவிட்டு நீங்கள் ஒதுங்கி தவம் செய்யலாம். அது வரை அனைவரிடமும் அன்பு காட்டி நிர்வாகம் செய்து வாருங்கள்!¨
¨ஆகட்டும் ஐயா!¨
¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨
¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
6
விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: தொடர் கதை
¨கதிர்வேலரே, வள்ளியம்மையே! உங்க ரெண்டு பேருக்கும் நான் பேசறது கேக்கும். ஆன்மீகத்தில கணவன் மனைவியை தனித்தனியா பாக்கிறதில்லை. தம்பதியாதான் பாப்போம்! கதிர்வேலரே பணம் சம்பாதிப்பது எப்படி முக்கியமோ அதே போல அதை செலவிட கத்துக்கறதும் முக்கியம். பொருளை தேடு தேடுன்னு தேடினீங்க. சேத்ததை எப்படி செலவழிச்சீங்க?¨
¨உண்மைதான் சாமி, யாருக்கும் எதுவும் பெரிசா பண்ணலை.¨
¨அதனால்தான் அது ஆஸ்பத்திரிகளுக்கு போச்சு! தேவையா இது? உங்க குலத்தாலதான் பல தான தர்மங்கள் நடைபெற்று இருக்கு. பல கோவில்கள் கும்பாபிஷேகம் ஆகியிருக்கு. பல வேத ஆகம பாடசாலைகள் நடந்து இருக்கு. அதை நினைவில் வைக்கணும். தொடர்ந்து அந்த காரியத்தை செய்யணும்.¨
¨ஆகட்டும் சாமி!¨
¨ குடும்ப சண்டையால பிரிஞ்சாலும் குல தெய்வ வழிபாட்டை விடலாமா? அதை சரி பண்ணுங்க.¨
¨ஆகட்டும் சாமி! ஆனா குல தெய்வம் எதுன்னே எங்க தாத்தா காலத்துலேந்தே தெரியாம போயிடுத்தே!¨
¨வேற எது? கடைசியா வந்து சேந்தீங்களே, அதே முருகன் கோவில்தான்! ¨
¨முருகா!¨
¨உங்க முன் ஜன்ம புண்ணியம்தான் கடைசியா உங்க குல தெய்வத்துகிட்டேயே கொண்டுவந்து விட்டது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நீங்கள் இருவரும் முன் ஜன்மங்களில செஞ்சதுக்கு தகுந்தபடி அனுபவிச்சீங்க. கஷ்டம் வேண்டியது அனுபவிச்சாச்சு. இனி சந்தோஷமா வீட்டுக்கு திரும்புங்க. வருஷம் ஒரு தரம் குல தெய்வத்தை போய் பாத்து ஆராதனை எல்லாம் செய்யணும். அதான், நீங்க கடைசியா போன கோவில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை பண்ணி அன்னதானம் செய்யுங்க. அக்கம் பக்க கிராமம் எல்லாத்துக்கும் செய்தி போகணும். ஒரு ஆயிரத்து எட்டு பேராவது சாப்பிடணும். சரியா? உங்க மனைவிக்கு தேவையான மருந்து எல்லாம் போன நாலு நாள்ளே கொடுத்தாச்சு.¨
¨நன்றி சாமி!¨ என்று கீழே விழுந்தனர் தம்பதியர்.
¨எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் சுத்தி சுத்தி வராங்களே. ரொம்ப தொந்திரவா இருக்கு.¨
¨வாரிசு இல்லைன்னுதான் சுத்தி வந்தாங்க. உங்களுக்கு கெடுதல் பண்ண நிறைய முயற்சி செய்தாங்க. அதுல கொஞ்சம் பலனும் அவங்களுக்கு கிடச்சது. ¨
¨அவங்களுக்கு அதால கெட்டதும் எதுவும் ஏற்பட வேண்டாம் சாமி.¨
¨ஆஹா! இதைதான் எதிர்பார்த்தேன். நல்ல மனசு உங்க ரெண்டு பேருக்கும். அதுதான் உங்களை காப்பாத்தி வருது. எல்லாருமே அவங்க அவங்க செய்கிற காரியத்துக்கு அனுபவிச்சே தீரணும். இதில நீங்க செய்யக்கூடியது ஒண்ணும் இல்லை. ¨
¨நீங்க யாரையும் வெறுக்காம தேவையான அளவு மட்டும் கொஞ்சம் அவங்களுக்கு உதவி செய்யலாம்.¨
--
¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
2
விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: தொடர் கதை
¨வாருங்கள் குழந்தைகளே!¨
எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.
¨பயப்பட வேண்டாம். புலி உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் தேடி வந்த இடத்தை இப்போது அடைந்து விட்டீர்கள். இனி மேல் உங்களுடன் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காது. யாருடன் பேசுகிறேனோ அவர்களுக்கு மட்டுமே கேட்கும். நீங்கள் பேசுவதும் அப்படியே. எனக்கு மட்டுமே கேட்கும். கவலைப்படாமல் பேசலாம். ¨
பிறகு ஒவ்வொருவருடனும் ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.
¨ குருவே எனக்கு எனக்கு சன்யாசம் கொடுங்கள்.¨
¨ஏன்?¨
¨வாழ்கையே பிடிக்காமல் போய்விட்டது. ஓடி ஓடி சம்பாதித்து அலுத்துவிட்டது. சம்பாதித்து, குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று .... என்கிற வாழ்கை பிடிக்கவேயில்லை. . ஆத்மாவை தேடுவதிலேயே நேரத்தை கடத்துகிறேன்.¨
¨சன்னியாசம் பெற்றுக்கொண்டால் உடனே ஆத்மா பிடிபட்டு விடுமா?¨
¨..........¨
¨இது உலகின் மீது உள்ள வெறுப்பு. பற்றற்று இருப்பதும் வெறுப்புடன் இருப்பதும் ஒன்று இல்லை. பிரம்மத்தைப்பற்றி கொஞ்சம் படித்து வைத்து இருக்கிறாய் அல்லவா?¨
¨ஆம்!¨
¨சுருக்கமாக எல்லாமே பிரம்மம் இல்லையா?¨
¨ஆமாம்¨
¨அப்போது பிரம்மத்தை வெறுக்கிறாயா?¨
¨.......¨
¨இல்லைதானே! இதோ பார் பற்றும் இருக்கக்கூடாது; வெறுப்பும் இருக்கக்கூடாது.¨
¨ சங்கர் உலக நியதியுடன் போயே ஆத்ம முன்னேற்றத்தை பார்க்கணும். இந்த கலி யுகத்துக்கு சன்யாசம் பொருந்தாது. சில மடங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் மிகவும் அரிதாக பிறவியில் வைராக்கியம் வந்தவர் தவிர மற்றவர்கள் குடும்பம் நடத்தத்தான் வேண்டும். இந்த கலியில் சரியாக சன்னியாசம் நடத்துவது துர்லபம். பிரச்சினைகள்தான் அதிகம். மனதில்தான் சன்னியாசம் முக்கியமாக வேண்டும். அதீத பற்றில்லாமல் குடும்பம் நடத்திக்கொண்டே எல்லாவற்றையும் செய்யலாம். உன் ஆத்ம முன்னேற்றம் இதனால் பாதிக்காது. மாறாக உறுதி படும். பொறு! ¨
¨எவ்வளவு நாள்? எவ்வளவு நாள் பொறுக்க வேண்டும்?¨
¨சங்கர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் நீ பொறுக்க வேண்டும். உன்னால் நீ இப்போது இருக்கிற நாடுக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட வேண்டி இருக்கிறது. அது நடந்ததும் நிறைய பொருள் தொடர்ந்து கிடைக்க வழி கிடைக்கும். அப்போது நாடு திரும்பு. நிறைய வேலைகள் உனக்காக இங்கே காத்துகொண்டு இருக்கு. நாட்டில் ஒரு ஆன்மீக மறு மலர்ச்சி ஏற்பட நீ ஒரு காரணமாக இருக்கப்போகிறாய்! அதற்கு பண பலமும் அவசியம். அதை சம்பாதித்துக்கொண்டு திரும்புவாய். தகுந்த நேரத்தில் உனக்கு தேவையான வழி காட்டுதல் கிடைக்கும்.¨
¨நல்லது குருவே. இப்போது எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்களே, என்ன பண்ணுவது? ¨
¨ செய்து கொள் சங்கர். அதை நீ மறுத்ததால்தான் உனக்கு மன உளைச்சல் வந்தது. உனக்காக பிறந்தவள் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. உன் பெற்றோரிடம் உன் சம்மதத்தை தெரியப்படுத்து. தானாக நடக்க வேண்டியது நடக்கும்.கிருஹஸ்த தர்மம் மிக உயர்ந்தது. அதை சரியாக கடை பிடிப்பவர்கள்தான் இல்லை. அப்படி நடந்தால் பல விஷயங்கள் மிகவும் சுலபமாக சரியாகிவிடும். ஆகவே திருமணம் செய்து கொண்டு முறைப்படி வாழ்ந்து பல விஷயங்களை சாதிப்பாயாக. உனக்கு வருபவள் இந்த விஷயங்களுக்கு அனுகூலமாகவே இருப்பாள்.¨
கதைத்தவர்
திவா
எப்போதென்றால்
8
விமர்சன ம்/ங்கள்
இதுக்கு சங்கிலி
குறிச்சொற்கள்: தொடர் கதை