Saturday, March 12, 2016

சபதம்

Swot ஆராய்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
நீ ரொம்ப பிடிவாதக்காரன். எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்கணும்ன்னு பார்ப்பாய். அதான் உன் பலம்.
உன் திறமைப்பத்தி உனக்கே தெரியாது. நல்லா பாட வரும்ன்னு உனக்கு நினைப்பு. இல்லைன்னு யாரானா சொன்னா ஒத்துக்க மாட்டே. உன்னை யாரானா புகழ்ந்துட்டா தலை கால் தெரியாம போயிடும்; மயங்கிடுவே. அவங்கள அப்படியே நம்பிடுவே. இப்படி எல்லாம் இருந்தா உருப்பட முடியாது…
கோபம் கொப்பளித்தது. போதும் போதும்! அப்படியா நினைக்கிறீங்க? செஞ்சு காட்டறேன் பாருங்க! காலாகாலத்துக்கும் என்னைப்பத்தி மக்கள் பேசறா மாதிரி செஞ்சு காட்டறேன் பாருங்க! சூளுரைக்கப்பட்டது.

சூளுரைத்த காகம் கோபமாக வெளியேறி பறந்தது. ஊரை அடைந்து மரத்தில் அமர்ந்து வடை சுட்டுக்கொண்டு இருந்த கிழவியை பார்த்தது!