Sunday, August 21, 2011

ஒரு முத்து, இரு முத்து, மும்முத்து.

தொடர் விளையாட்டு சாதாரணமா பிடிக்காது. இன்னைக்கு என்னமோ ஒரு மூடு. கோமா அக்கா கோத்து வாங்கி எஸ்கேப் ஆக முடியாதுன்னு மெய்ல் போட்டு பயமுறுத்தவே சரி எழுதுவோம்ன்னு ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளா வேற ரொம்ப கான்சென்ட்ரேட் செய்யற வேலையா வேற போச்சு. ஒரு மாறுதலுக்கு... மாறு லுக்கு....
கோமா அக்கா போஸ்ட்டையே எடிட் பண்ணிட்டேன். கலர் கலரா போட்டு இருக்காங்க. தாங்கீஸ்!
----
இப்படி பொதுவா போஸ்ட் போடக்கூட எனக்கு ஒரு ப்ளாக் இல்ல. அதனால எண்ண இப்ப? இது கதை உடற ப்லாக்தானேன்னு... ஹிஹிஹி.
----

ஒரு முத்து ,இரு முத்து ,மும்முத்து.
1) விரும்பும் மூன்று விஷயங்கள்


1.நல்ல காபி
2.
நல்ல நாவல்..
3.
லைட்டான மழையுடன் சூடான டீ, சாய் நாற்காலி, பகோடா.
-----------------------------------------------------
2)
விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.
பொய். (விளையாட்டுக்கு கூட.)
2.
வலையில் வசை
3.
தலைக்கு மேலே வேலை
--------------------------------------
3)
பயப்படும் மூன்று விஷயங்கள்?

1.
பயமே கிடையாது. சாரி.
--------------------------
4)
புரியாத மூன்று விஷயங்கள்?


1. ஆஹா! இது நிறையவே இருக்கு. நான் யார்?
2.
எங்கிருந்து வந்தேன்?
3.
எங்கே போகிறேன்?
--------------------------.

5)
மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1.,
பிளையார் பொம்மை. (இப்ப கை உடைஞ்சி போயிட்டார் :-(
2
கணினி திரை.
கூலிங் க்ளாஸ்
---------------------
6)
சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

1.
என் பேத்தி. (ஆச்சரியம் இல்லை)
2.
தேவன் நாவல்கள்.
3.
ஆபரேஷன் தியேட்டரில் ஆளுக்கு ஆள் அடிக்கும் ஜோக்குகள்.
-----------------------------
7)
தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1-
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இந்த க்ஷணம் ன்னு எடுத்துக்காம பதில் சொல்லறேன். மும்பை ஐஐடி திட்டமான ஸ்போக்கன் டுடோரியல் தமிழாக்கம். உசிரை வாங்குது!
2-
பழைய தமிழ், சம்ஸ்க்ருத புத்தகங்களின் படமாக்கம்.
3-
உரத்த சிந்தனை.
---------------------------
8)
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1-
அறக்கட்டளைக்கு வைப்பு நிதி சேகரம்.
2-
இந்த வேலை எல்லாம் விட்டுவிட்டு ஆத்ம சிந்தனை கொஞ்சமாவது......
3-
குறிப்பிட்ட அளவாவது புத்தக மின்னாக்கம்.
------------------------------------
9)
செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

1-
அது நம்மகிட்ட இருக்கா? மேலே சொன்ன மூணுமே செய்து முடிக்ககூடியதுதான்.

---------------------------
10)
கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.
தேவையில்லாம மத்தவங்களை பத்தி கமெண்ட்ஸ்.
2.
சாப்பாட்டில் குறைகள் கூறுவது
3.
கோன் ஸ்பீக்கரில் .சத்தமான பாட்டுக்கள்.
--------------------------
11)
கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

1.
சம்ஸ்க்ருதம் சரளமாக படிக்க பேச...
2.
கோபப்படாமல் இருப்பது எப்படி?
3. சோர்வில்லாமல் வேலை செய்வது எப்படி.
---------------------------- 
12)
பிடித்த மூன்று உணவு வகைகள் ?

1.
கடலை மிட்டாய்.
2.
பூரி. (அப்படியே சாப்பிடுவேன்)
3.
புதினா துவையல்.
------------------------
13)
அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

1.
இப்படி மத்தவங்களை கஷ்டப்படுத்தறதில்லை. :-))
-----------------------
14)
பிடித்த மூன்று படங்கள்?

1.
ராஜா ரவி வர்மாவோட.... என்னது சினிமா படமா? சரி சரி.. பலே பாண்டியா.
2-
சலங்கை ஒலி.
3-
ஹார்ட் இஸ் அ லோன்லி ஹண்டர்.
----------------------------- 
15)
இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)
உணவு உடை இருப்பிடம் எப்பொழுதும் சொல்வது.அது போக...
1-
தினசரி எட்டு மணி நேர தூக்கம்.
2-
சரியான நேரத்துக்கு உணவு. (டயபெடிஸ்)
3-
தினசரி ஜபம். (கொஞ்சமாவது)
---------------------------------------
16)
இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
பாவம், விடுங்க. யாரும் இல்லை. விரோதிகளை சம்பாதித்துக்கொள்ள விருப்பம் இல்லை. :-))))



Thursday, June 16, 2011

கொலை.....


கொலை செய்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒன்று இல்லை இரண்டு கொலைகள்.
முரட்டுத்தனமும் மஹா கோபமுமாக இருந்தவன் வாழ்க்கை திடீரென்று ஏதோ திசை மாறிபோய்விட்டது. கொசுவைக்கூட கொல்லக்கூடாது என்று கொசு வலை போட்டுக்கொண்டே படுத்துவந்தவன். என் முரட்டுத்தனம் கோபம் எல்லாவற்றையும் ஆடக்கி வைத்துவிட்டு நல்ல பேருடனேயே வாழ்ந்து வருகிறேன்.... எந்த உயிரை பார்த்தாலும் ஒரு கம்பேஷன்தான் வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் நல்லா இருக்கணும் என்றே ப்ரார்த்தனைகள் எப்போதும். ம்ம்ம்.... இன்று இப்படி....

என் கையை பார்க்கிறேன். இவ்வளவு ரத்தமா? இது என் ரத்தமா இல்லை கொலையுண்டவரின் ரத்தமா? எப்படியும் என்னுடையதுதான் போல இருக்கிறது. யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்ன சொல்லுவார்கள்? வியர்த்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பயமாகவே இருந்தது. இன்னும் யாரும் பதுங்கி இருக்கிறார்களோ?

கீழே கிடக்கும் சடலங்களை பார்க்கிறேன். பாவம் என்று தோன்றுகிறது. விரதம் கைக்கொண்ட நாள் முதலே வெகு பாதுகாப்பாக இருந்து இருக்கிறேன். ஆனால் இன்றோ கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அதனால்தான் நான் இருக்கும் இடத்துக்கு இவர்களால் வர முடிந்தது.

அதை நானும் கவனிக்கவில்லை. திடீரென இவர்கள் என்னை ஒன்றாக தாக்கப்போக... முன் காலத்திய பழக்கம்... அனிச்சை செயல்... ரிப்லெக்ஸ் என்கிறார்களே... நானாக அடிக்கவில்லை. கைதான் அடித்தது. கை அடித்துவிட்டது என்று சற்று நேரம் கழித்தே உணர்வுக்கு தெரிந்தது... தெரிந்த போதோ காலம் கடந்துவிட்டு இருந்தது. இவ்வளவு சுலபமாக இவர்கள் இறந்து போனது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! என் சாமர்த்தியம் எனக்கே தெரியாமல் இருக்கிறது.

சரி இப்போது என்ன செய்வது? பக்கத்தில் இருக்கக்கூடிய நீர் பிரவாகம் நினைவுக்கு வந்தது. ஹும்... அதுதான் செய்யத்தக்கது. சடலங்களை சுமந்தபடி சென்று நீர் ப்ரவாகத்தில் விட்டேன். கைகளை சுத்தமாக கழுவினேன்.

பாத் ரூமில் இருந்து திரும்பி வந்து படுக்கையில் கொசு வலைக்குள் புகுந்து கொண்டு ,வலை நகர்ந்து இருந்த இடத்தை சரி செய்துவிட்டு தூங்கிபோனேன்.

பி.கு: நேற்று நடந்த உண்மை நிகழ்ச்சி.... கொஞ்சம் கண்ணு காது...மிஸ்லீடிங்க.... ஹிஹிஹி!