Thursday, May 5, 2016

குழந்தைக்கதைகள் - 2

ஒரு ஊர்ல ஒரு குட்டிப்பொண்ணு இருந்தாளாம். அவ இப்படீஈஈ தோட்டத்துக்கு போனாளாம். அங்க ஒரு நாய்க்குட்டி இருந்ததாம். அந்த நாய்க்குட்டி சோகமா இருந்ததாம். அந்த பொண்ணு நாய்க்குட்டிகிட்ட “ஏன் சோகமா இருக்கே?” ன்னு கேட்டாளாம். நாய்க்குட்டி “அம்மா திட்டினா” ந்னு சொல்லித்தாம். “அச்சோ பாவமே! ஏன்?” ந்னு கேட்டாளாம். நா முக்கியமான பேப்பரை எல்லாம் கடிச்சி கொதறி போட்டேன். அதனால திட்டின்னா” ந்னு சொல்லித்தாம். “அட, அது போன மாசம்ன்னா?” ந்னு சொன்னாளாம். ஆமாம்ன்னு சொல்லித்தாம்.

சரி வா போலாம்ன்னு பொண்ணு நாய்க்குட்டிய அழச்சுண்டு போனாளாம். அங்க ஒரு பூன இருந்துதாம். அதுவும் அழுதுண்டு இருந்துதாம். “ஏன் அழற?” ந்னு நாய்க்குட்டி கேட்டுதாம். “இந்த கால்ல அடிப்பட்டுது; அதனால அழறேன்” ந்னு சொல்லித்தாம். “இந்த கால்லயா? ஒண்ணும் காயமே காணமே! நல்லாத்தானே இருக்கு? எப்ப அடி பட்டது?” ந்னு நாய்க்குட்டி கேட்டுதாம். அதுக்கு “போன மாசம் இங்க லேசா அடிபட்டது” ந்னு பூன சொல்லித்தாம்.  “ஏண்டா யாரும் போன மாசம் லேசா பட்ட அடிக்கு இப்ப அழுவாங்களா?” ந்னு நாய்க்குட்டி கேட்டுதாம். “ஏன் நீ மட்டும் போன மாசம் உங்க அம்மா திட்டினதுக்கு இப்ப சோகமா இருக்கலையா?” ந்னு பூன கேட்டுதாம்.

அந்த பொண்ணு ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி விளையாட அழைச்சுண்டு போனாளாம்.

No comments: