Wednesday, May 4, 2016

குரங்கும் குட்டிகளும்

 ஒரு காட்டில ஒரு குரங்கு இருந்துதாம். அதுக்கு ரெண்டு குட்டி இருந்துதாம். ஒரு நாள் அம்மா குரங்கு ரெண்டுத்தையும் விட்டுட்டு “சமத்தா இருங்கோ; நான் போய் வாழைப்பழம் கொண்டு வரேன்”னு போச்சாம். சரிம்மான்னு சொல்லிட்டு ரெண்டு குட்டியும் மரத்து மேல சமத்தா விளையாடிண்டு இருந்துதாம்.
கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா கொரங்கு திரும்பி வந்துதா? ரெண்டும் ஜாலியா “ஹை அம்மா வந்தாச்சு, அம்மா வந்தாச்சு”ன்னு கத்தித்தாம்.
தலைய தூக்கி பாத்த அம்மா கொரங்கு “டேய் பசங்களா! குதிங்கடா”ன்னு கத்தித்து.
ரெண்டு குட்டில சின்ன கொரங்கு உடனே  ‘பொத்’ ந்னு குதிச்சுடுத்து. கொஞ்சம் பெரிசா இருந்த குட்டிக்குரங்கு ’எதுக்கும்மா?’ ன்னு கேட்டுண்டு அங்கயே இருந்தது.
கீழ குதிச்ச குட்டியை அம்மா கொரங்கு போய் பிடிச்சுண்டுடுத்து.
அந்த குதிக்காத குட்டிய ‘கா தெ ஸ்னேக்’ வந்து உடம்ப சுத்தி இறுக்கித்து. குட்டி “ஐயோ அம்மா!” ன்னு அலறித்து. அம்மா குரங்கு உடனே பக்கத்துல இருந்த தென்ன மரத்து மேல ஏறித்து. ஒரு தேங்காய பறிச்சு கா மேல போட்டுது. கா க்கு தலை சுத்தித்து. அது குரங்கை பிடிச்சு இருந்ததை விட்டுடுத்து, கொரங்கு குட்டி கீழே விழுந்தது. அதுக்குள்ள அம்மா கொரங்கு கீழே போய் அத பிடிச்சுண்டுடுத்து.
அந்த குட்டி “அம்மா, உடம்பெல்லாம் வலிக்கறது. ஊ பட்டுடுத்து”ன்னு அழுதுது. “சரியாப்போயிடும். நீ நா குதின்னு சொன்னத உடனே கேக்காம இருந்தாலத்தானே இப்படி ஆச்சு? இனிமே இப்படி செய்யாதே!” ன்னு சொல்லித்தாம்.
சரிம்மா; இனிமே நீ சொன்னா…
“அம்மா சொன்னா உடனே கேக்கணும். அதானே நீதி தாத்தா?”

ஹிஹிஹி! ரைட்டு. தூங்கு!

No comments: