Tuesday, March 10, 2009

தேடல் -17

¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨

¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
¨ஏன்?¨
¨என் குருவை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன்.¨

நிறைவான சிரிப்பொலி கேட்டது.

¨இனி உனக்கும் உன் குருவுக்கும் கூட இப்போது பேசுவது கேட்கும். அந்த மடத்தைப்பற்றிதான் உனக்கு தெரியுமே? மிகவும் பெயர் பெற்றது. நான் சொன்னபடி செய்தால் அந்த மடத்து பொறுப்பு உனக்கு வந்து சேரும். நிறைய பொருளும் கிடைக்கும், ஊரார் உன்னை மதித்து கொண்டாடுவார்கள். இந்த நாட்டிலேயே, ஏன் உலகிலேயே சிறந்த ஆன்மீகவாதி என்ற பெயர் கிடைக்கும். நான் சொல்கிறபடி செய்யாது போனால் இத்தனையும் இழப்பாய்!¨

¨என்ன வேண்டுமானாலும் இழந்துவிட்டு போகிறேன். என் குருவை விட்டு போக மாட்டேன்.¨

¨நித்தியானந்தம்! உன்னைப்போல குரு பக்தி கொண்டவரை பார்ப்பது அரிது. உனக்கு என்று சில வேலைகள் காத்து இருக்கின்றன. நாட்டில் மக்கள் அரசியல் மீது நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிறார்கள். அராஜகம் பெருகிவிட்டது. இனி ஆன்மீகம் ஒன்றே அவர்களுக்கு நம்பிக்கையை தரும். அப்போதுதான் அவர்களால் முழு சக்தியுடன் வேலை செய்து விளங்க முடியும். இந்த மறு மலர்ச்சி உன்னால்தான் நிகழ வேண்டும் என்பது இறைவன் சித்தம். அதற்கு மறுப்பு சொல்லாதே.¨

¨மாட்டேன்!!¨ என்றான் நித்தி உறுதியாக.

¨நித்தி அடியேன் சொல்கிறேன். இவர் நம் குரு பரம்பரையில் மிகவும் மூத்தவர். அதனால் இவர் சொல்வதை தட்டக்கூடாது.¨
¨குருவே உங்களைத்தவிர எனக்கு யாரையும் தெரியாது.¨
¨அப்படியானால் நான் சொல்வதை கேட்பாயல்லவா? நான் உத்திரவு போடுகிறேன். இவர் சொல்வது போல இனி நடந்து கொள்ள வேண்டும். என்ன யோசிக்கிறாய்? இனி இவர் என்ன சொன்னாலும் அதை நான் சொல்வதாகவே நினைக்க வேண்டும்.!¨

ஒரு நிமிட மௌனத்துக்குப்பின் ¨குருவே அப்படியானால் சரி. உங்கள் ஆணையை மீற மாட்டேன்!¨ என்றான் நித்தி.

¨ஆகட்டும். நேரம் ஆகிவிட்டது. நீங்கள் கிளம்பலாம்.¨

¨ஐயா எங்களுக்கு வழி காட்டி உதவிய இந்த பெண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்!¨ என்றான் சங்கர்.

கலகல என்ற சிரிப்பொலி கேட்டது

1 comment:

Kavinaya said...

ம்... அப்புறம்?