Friday, March 6, 2009

தேடல்-15

¨கதிர்வேலரே, வள்ளியம்மையே! உங்க ரெண்டு பேருக்கும் நான் பேசறது கேக்கும். ஆன்மீகத்தில கணவன் மனைவியை தனித்தனியா பாக்கிறதில்லை. தம்பதியாதான் பாப்போம்! கதிர்வேலரே பணம் சம்பாதிப்பது எப்படி முக்கியமோ அதே போல அதை செலவிட கத்துக்கறதும் முக்கியம். பொருளை தேடு தேடுன்னு தேடினீங்க. சேத்ததை எப்படி செலவழிச்சீங்க?¨

¨உண்மைதான் சாமி, யாருக்கும் எதுவும் பெரிசா பண்ணலை.¨

¨அதனால்தான் அது ஆஸ்பத்திரிகளுக்கு போச்சு! தேவையா இது? உங்க குலத்தாலதான் பல தான தர்மங்கள் நடைபெற்று இருக்கு. பல கோவில்கள் கும்பாபிஷேகம் ஆகியிருக்கு. பல வேத ஆகம பாடசாலைகள் நடந்து இருக்கு. அதை நினைவில் வைக்கணும். தொடர்ந்து அந்த காரியத்தை செய்யணும்.¨

¨ஆகட்டும் சாமி!¨

¨ குடும்ப சண்டையால பிரிஞ்சாலும் குல தெய்வ வழிபாட்டை விடலாமா? அதை சரி பண்ணுங்க.¨

¨ஆகட்டும் சாமி! ஆனா குல தெய்வம் எதுன்னே எங்க தாத்தா காலத்துலேந்தே தெரியாம போயிடுத்தே!¨

¨வேற எது? கடைசியா வந்து சேந்தீங்களே, அதே முருகன் கோவில்தான்! ¨

¨முருகா!¨

¨உங்க முன் ஜன்ம புண்ணியம்தான் கடைசியா உங்க குல தெய்வத்துகிட்டேயே கொண்டுவந்து விட்டது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நீங்கள் இருவரும் முன் ஜன்மங்களில செஞ்சதுக்கு தகுந்தபடி அனுபவிச்சீங்க. கஷ்டம் வேண்டியது அனுபவிச்சாச்சு. இனி சந்தோஷமா வீட்டுக்கு திரும்புங்க. வருஷம் ஒரு தரம் குல தெய்வத்தை போய் பாத்து ஆராதனை எல்லாம் செய்யணும். அதான், நீங்க கடைசியா போன கோவில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை பண்ணி அன்னதானம் செய்யுங்க. அக்கம் பக்க கிராமம் எல்லாத்துக்கும் செய்தி போகணும். ஒரு ஆயிரத்து எட்டு பேராவது சாப்பிடணும். சரியா? உங்க மனைவிக்கு தேவையான மருந்து எல்லாம் போன நாலு நாள்ளே கொடுத்தாச்சு.¨

¨நன்றி சாமி!¨ என்று கீழே விழுந்தனர் தம்பதியர்.

¨எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் சுத்தி சுத்தி வராங்களே. ரொம்ப தொந்திரவா இருக்கு.¨

¨வாரிசு இல்லைன்னுதான் சுத்தி வந்தாங்க. உங்களுக்கு கெடுதல் பண்ண நிறைய முயற்சி செய்தாங்க. அதுல கொஞ்சம் பலனும் அவங்களுக்கு கிடச்சது. ¨

¨அவங்களுக்கு அதால கெட்டதும் எதுவும் ஏற்பட வேண்டாம் சாமி.¨

¨ஆஹா! இதைதான் எதிர்பார்த்தேன். நல்ல மனசு உங்க ரெண்டு பேருக்கும். அதுதான் உங்களை காப்பாத்தி வருது. எல்லாருமே அவங்க அவங்க செய்கிற காரியத்துக்கு அனுபவிச்சே தீரணும். இதில நீங்க செய்யக்கூடியது ஒண்ணும் இல்லை. ¨

¨நீங்க யாரையும் வெறுக்காம தேவையான அளவு மட்டும் கொஞ்சம் அவங்களுக்கு உதவி செய்யலாம்.¨

--
¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.

2 comments:

குமரன் (Kumaran) said...

Whatever told to this couple are too obvious.

திவாண்ணா said...

ஆமாம் குமரன். ஆனால் பலருக்கு அது தெரியாமலே இருக்கே!