Tuesday, March 3, 2009

தேடல் -12

¨ஆமாம்! ஏன் இப்படி என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தீர்கள்?¨ என்று கேட்டார் அடிகளார்.

¨பின்னே காட்டுவாசிகள் திரும்பி வந்தால்?¨ என்று பதில் கேள்வி எழுப்பினார் குமரன்.
¨ஒன்றும் ஆகி இராது¨ என்றார் அடிகள்.
நித்தி கருமமே கண்ணாக அடிகளாரின் உடம்பை ஆராய்ந்து கொண்டிருந்தான். பல இடங்களில் புலியின் பல் ஆழமாக போய் இருந்ததும் அதற்கு ஏதோ மூலிகை வைத்து கட்டி இருந்ததும் தெரிய வந்தது.
சங்கர் ஆராய்ந்து பார்த்ததில் காயம் ஆழமாக பலமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவே தோன்றியது ஆச்சரியமாக இருந்தது.
¨யார் இப்படி சிகித்சை செய்தது?¨
¨காட்டுவாசிகள்தான்.¨
¨என்னது?¨
¨ஆமாம் அவர்கள் நீங்கள் நினைப்பது போல பயங்கரமானவர்கள் இல்லை.¨
¨நடந்ததை சொல்ல வேண்டும்.¨
¨சுருக்கமாக சொல்கிறேன். புலி திடீரென தாக்கியதில் எனக்கு ஒண்ணும் புரியவில்லை. அது வெகு வேகமாக என்னை தாக்கி கவ்விக்கொண்டு விட்டது. கழுத்தில் தடிமனான துணி சுத்தி இருந்ததால் சாகவில்லை போல் இருக்கிறது. அது அதிக தூரம் ஒன்றும் என்னை இழுத்துப்போகவில்லை. கொஞ்ச தூரத்திலேயே ஒரு புதரின் பின்னால் கிடந்தேன். நித்தியும் மஞ்சுவும் எனக்கு வெகு அருகில்தான் போனார்கள். பலங்கொண்ட மட்டும் கத்தினேனே. காதில் விழவில்லை?¨
நித்தி திகைப்புடன் பார்த்தான்.
¨உங்களுக்கு பலங்கொண்ட மட்டும் என்பது அப்போது அதிகமாக இருந்திருக்காது¨ என்றார் குமரன்.
¨அப்புறம் காட்டுவாசிகள் வந்தார்கள். என்னை தூக்கிப்போனார்கள். நான் நினைவு இழந்துவிட்டேன். விழித்தபோது குடிசையில் இருந்தேன். காட்டுவாசிகள் மருந்திட்டு கட்டுபோட்டார்கள். அவர்களை எவ்வளவு தவறாக மதிப்பிட்டேன். சக சீவர்களிடம் அன்பு காட்டுவது என்னைப்போன்றவர்களுக்கு முக்கியம் என்று புரிய வைத்தார்கள். எவ்வளவு பேரை அனாவசியமாக கடிந்து கொண்டேன்? கோபப்பட்டேன்? என்னைப்போன்றவர் கடைபிடிக்க வேண்டியதெல்லாம் நேற்று படுத்துக்கிடந்த போது தெரிய வந்தது.¨
¨அப்போ காட்டுவாசிகளால் நமக்கு ஆபத்து இல்லை?¨
¨இல்லை என்றே நினைக்கிறேன்.¨
¨எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்? நாம் போய் கொண்டே இருக்கலாம்.¨ என்றான் சங்கர்.
எங்கே போவது?
அடுத்த பத்து நிமிடங்களில் இருபது கருத்துக்கள் வெளியாகின.
கதிர்வேலன் காட்டுவாசிகளால் பிரச்சினை இல்லை என்று ஆகிவிட்டதால் தொடர்ந்து மேலே போகலாம் என்றார். மற்றவர் ஆபத்து நீங்கியதாக ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியில் கதிர்வேலன் தம்பதியரைத்தவிர மற்றவர் திரும்பி போக தீர்மானித்தனர். விரும்பினர் என தெரிந்தது.
சங்கர் வள்ளியம்மையுடன் ஏதோ பேசிக்கொணடு இருந்த மஞ்சுவை பார்த்து ¨என்ன மஞ்சு, எங்களை கிளம்பிய இடத்துக்கு கொண்டு சேர்த்து விடுகிறாயா?¨ என்றான்.
மஞ்சு வழக்கம் போல் தரையை பார்த்துக்கொண்டே ¨ஆகட்டும் சாமி!¨ என்றாள்.
அனைவரும் மூட்டைகளை தூக்கிக்கொண்டனர். வள்ளியம்மை கதிர்வேலரிடம் ஏதோ சொல்ல அவரும் பேசாமல் பைகளை தூக்கிக்கொண்டார்.
அடிகளால் நடக்க முடிகிறது என்று கண்டுகொண்ட பின் அனைவரும் தயங்காமல் நடக்கலாயினர்.

2 comments:

Kavinaya said...

ஹையா! நான் ரைட்டு! :)

ஆனா ஏன் எல்லாரும் திரும்பி போறாங்க? :(

திவாண்ணா said...

//ஹையா! நான் ரைட்டு! :) //
:-)) ஆமாம்! காட்டுவாசிகள் கெட்டவங்க இல்லை!

//ஆனா ஏன் எல்லாரும் திரும்பி போறாங்க? :( //

ச்சோ ச்சோ! தேடல் அவ்வளோதானா? முடியுதோ? பாக்கலாம்!