Monday, March 2, 2009

தேடல்-11

விடிந்துவிட்டதை உணர்ந்த போது சங்கருக்கு சற்று அலுப்பாகவே இருந்தது. ஏன் இப்படி கிறுக்குத்தனமாக மாட்டிக்கொண்டு விழிக்கிறோம்? நல்ல வேலை, நல்ல சம்பளம், - ஒரு கல்யாணத்தை செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக.......

உடனே தன்னால் அப்படி இருக்கவே முடியாது என்று தோன்றியது. உள்ளே ஏதோ ஒரு அமைதியின்மை. எதை செய்தால் இது தீரும்? புலிக்குகையை பற்றி கேட்ட போதே ஒரு ஈர்ப்பு இருந்தது. அட மாதக்கணக்கில் தூக்கமே வராமல் விழித்த நான் கடந்த சில நாட்களாக நன்றாக தூங்கி இருக்கிறேனே? அது எப்படி. ஒரே அலைச்சல், நடை அதுதான் என்ற நினைப்புடனேயே இல்லை இது வேறு ஏதோ என்றும் தோன்றியது. ச்சே! இந்த மாதிரி குழப்பங்கள்தான் என் அமைதி இன்மைக்கு காரணம் என்று முணு முணத்துக்கொண்டான் சங்கர். குமரன் என்ன செய்கிறான் என்று திரும்பிப்பார்த்தான். வெளியே எதோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தெரிந்தது. திடீரென்று பரபரப்பானான் குமரன். இங்கே பார் நம்பவே மாட்டாய் என்றான் திரும்பி.

எழுந்து போய் குமரன் பார்த்துக்கொண்டு இருந்த ஓட்டை வழியே வெளியே சங்கர் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. ஒன்றும் இல்லையே என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே குடிசையின் வெளியே சத்தம் கேட்டது. வாசலின் குறுக்கே இருந்த தடைகள் விலக்கப்படும் ஒலி கேட்க தொடர்ந்து "கதவு"ம் திறக்கப்பட்டது.
“நல்லா இருக்கீங்களா சாமி" என்று மஞ்சு கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்!

இவளை பார்த்துதான் குமரன் கூப்பிட்டு இருக்க வேண்டும்.
எங்கே போயிருந்தாய் மஞ்சு?
அட எங்கே போவேன் சாமி? பின்னாலேயேதான் வந்துகிட்டு இருந்தேன். சரியான நேரம் பாத்து ஏதனாச்சும் செய்யலாம்ன்னு... திடீர்ன்னு பாத்தா காட்டுவாசிங்க கிளம்பிட்டாங்க. திரும்பி வாராங்களான்னு கொஞ்ச நேரம் பாத்துட்டு இதோ வரேன்....சீக்கிரம் கிளம்பிடுவோம். எங்கியாச்சும் திரும்பி வந்துட போறாங்க...
பரபரப்புடன் சொன்னாள்.

குமரனும் சங்கரும் அடுத்த குடிசைக்குள் போகும்முன்னேயே அதன் "கதவு" திறந்து வனிதா வெளிப்பட்டாள். மற்றவர்களும் வந்து சேர்ந்து கொள்ள அனைவரும் கிளம்பிவிட்டனர். அட இப்படிக்கூடவா ஒரு எதிர்பாராத அதிருஷ்டம்! நித்தி மட்டும் ஏனோ தயங்கி நிற்பதாக தோன்றியது. திடீரென்று குமரன் நாம மத்த குடிசைகளையும் பார்த்துவிடலாம். ஏதாவது சாப்பிட இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்றான். அட நல்ல யோசனைதான், நீங்கள் போய் கொண்டே இருங்கள் நாங்கள் விரைந்து தேடிவிட்டு வருகிறோம் என்றான் சங்கர். மற்றவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியே போவதற்குள்ளேயே ஆ என்று கூவினான் குமரன்.


மீதி இருந்த இரண்டு குடிசைகள் ஒன்றில் நுழைந்து அங்கே ஒன்றும் இல்லை என்று கண்டு கொண்ட சங்கர் குமரன் கூச்சலால் வெளியே வந்து அங்கே ஓடினான். உள்ளே நுழந்து இருந்த குமரன் யாரையோ கைத்தாங்கலாக அழைத்து வருவது தெரிந்தது. அது யார் என்று தெரிய வந்தபோது திகைத்துப்போனான் சங்கர்.

¨குருவே குருவே!¨ என்று நித்தி ஓடி வந்து வெளியே வந்தவர் காலில் போய் விழுந்தான். அப்போதுதான் அது அடிகளார் என்று புரிந்தது மற்றவர்களுக்கு.
வனிதா தாழ்ந்த குரலில் எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம். முதலில் அவரை அழத்துக்கொண்டு வாருங்கள் என்றாள்.
கும்பலாக அனைவரும் அடிகளாரை எப்படியோ தாங்கிக்கொண்டு ஓடினர். அடிகளார் ஏதோ சொல்ல முயல எல்லாம் அப்புறம் ஆகட்டும் என்று அடமடக்கினர். மஞ்சு முன் ஓடி வழி காட்ட மற்றவர் பின்னாலேயே விரைந்தனர். ஒரு இருபது நிமிடம் ஓடுவதற்குள் அனைவருக்கும் வியர்த்துவிட்டது. போதும். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று குமரன் சொல்ல அனைவரும் ஆங்காங்கே அமர்ந்தனர்.
¨ஆமாம்! ஏன் இப்படி என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தீர்கள்?¨ என்று கேட்டார் அடிகளார்.

3 comments:

Kavinaya said...

காட்டுவாசிகள் எதிரிகளே இல்லைதானே? :)

மெளலி (மதுரையம்பதி) said...

அப்பாடி அந்த சன்யாசி துர்மரணம் எய்தவில்லை...

திவாண்ணா said...

:-))))))))))))

பதில் சொல்ல முடியாத கேள்விகளாவே கேக்கறீங்களே?!!

:-))