Sunday, August 21, 2011

ஒரு முத்து, இரு முத்து, மும்முத்து.

தொடர் விளையாட்டு சாதாரணமா பிடிக்காது. இன்னைக்கு என்னமோ ஒரு மூடு. கோமா அக்கா கோத்து வாங்கி எஸ்கேப் ஆக முடியாதுன்னு மெய்ல் போட்டு பயமுறுத்தவே சரி எழுதுவோம்ன்னு ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளா வேற ரொம்ப கான்சென்ட்ரேட் செய்யற வேலையா வேற போச்சு. ஒரு மாறுதலுக்கு... மாறு லுக்கு....
கோமா அக்கா போஸ்ட்டையே எடிட் பண்ணிட்டேன். கலர் கலரா போட்டு இருக்காங்க. தாங்கீஸ்!
----
இப்படி பொதுவா போஸ்ட் போடக்கூட எனக்கு ஒரு ப்ளாக் இல்ல. அதனால எண்ண இப்ப? இது கதை உடற ப்லாக்தானேன்னு... ஹிஹிஹி.
----

ஒரு முத்து ,இரு முத்து ,மும்முத்து.
1) விரும்பும் மூன்று விஷயங்கள்


1.நல்ல காபி
2.
நல்ல நாவல்..
3.
லைட்டான மழையுடன் சூடான டீ, சாய் நாற்காலி, பகோடா.
-----------------------------------------------------
2)
விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.
பொய். (விளையாட்டுக்கு கூட.)
2.
வலையில் வசை
3.
தலைக்கு மேலே வேலை
--------------------------------------
3)
பயப்படும் மூன்று விஷயங்கள்?

1.
பயமே கிடையாது. சாரி.
--------------------------
4)
புரியாத மூன்று விஷயங்கள்?


1. ஆஹா! இது நிறையவே இருக்கு. நான் யார்?
2.
எங்கிருந்து வந்தேன்?
3.
எங்கே போகிறேன்?
--------------------------.

5)
மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1.,
பிளையார் பொம்மை. (இப்ப கை உடைஞ்சி போயிட்டார் :-(
2
கணினி திரை.
கூலிங் க்ளாஸ்
---------------------
6)
சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

1.
என் பேத்தி. (ஆச்சரியம் இல்லை)
2.
தேவன் நாவல்கள்.
3.
ஆபரேஷன் தியேட்டரில் ஆளுக்கு ஆள் அடிக்கும் ஜோக்குகள்.
-----------------------------
7)
தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1-
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இந்த க்ஷணம் ன்னு எடுத்துக்காம பதில் சொல்லறேன். மும்பை ஐஐடி திட்டமான ஸ்போக்கன் டுடோரியல் தமிழாக்கம். உசிரை வாங்குது!
2-
பழைய தமிழ், சம்ஸ்க்ருத புத்தகங்களின் படமாக்கம்.
3-
உரத்த சிந்தனை.
---------------------------
8)
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1-
அறக்கட்டளைக்கு வைப்பு நிதி சேகரம்.
2-
இந்த வேலை எல்லாம் விட்டுவிட்டு ஆத்ம சிந்தனை கொஞ்சமாவது......
3-
குறிப்பிட்ட அளவாவது புத்தக மின்னாக்கம்.
------------------------------------
9)
செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

1-
அது நம்மகிட்ட இருக்கா? மேலே சொன்ன மூணுமே செய்து முடிக்ககூடியதுதான்.

---------------------------
10)
கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.
தேவையில்லாம மத்தவங்களை பத்தி கமெண்ட்ஸ்.
2.
சாப்பாட்டில் குறைகள் கூறுவது
3.
கோன் ஸ்பீக்கரில் .சத்தமான பாட்டுக்கள்.
--------------------------
11)
கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

1.
சம்ஸ்க்ருதம் சரளமாக படிக்க பேச...
2.
கோபப்படாமல் இருப்பது எப்படி?
3. சோர்வில்லாமல் வேலை செய்வது எப்படி.
---------------------------- 
12)
பிடித்த மூன்று உணவு வகைகள் ?

1.
கடலை மிட்டாய்.
2.
பூரி. (அப்படியே சாப்பிடுவேன்)
3.
புதினா துவையல்.
------------------------
13)
அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

1.
இப்படி மத்தவங்களை கஷ்டப்படுத்தறதில்லை. :-))
-----------------------
14)
பிடித்த மூன்று படங்கள்?

1.
ராஜா ரவி வர்மாவோட.... என்னது சினிமா படமா? சரி சரி.. பலே பாண்டியா.
2-
சலங்கை ஒலி.
3-
ஹார்ட் இஸ் அ லோன்லி ஹண்டர்.
----------------------------- 
15)
இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)
உணவு உடை இருப்பிடம் எப்பொழுதும் சொல்வது.அது போக...
1-
தினசரி எட்டு மணி நேர தூக்கம்.
2-
சரியான நேரத்துக்கு உணவு. (டயபெடிஸ்)
3-
தினசரி ஜபம். (கொஞ்சமாவது)
---------------------------------------
16)
இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
பாவம், விடுங்க. யாரும் இல்லை. விரோதிகளை சம்பாதித்துக்கொள்ள விருப்பம் இல்லை. :-))))



14 comments:

goma said...

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
பாவம், விடுங்க. யாரும் இல்லை. விரோதிகளை சம்பாதித்துக்கொள்ள விருப்பம் இல்லை. :-))))


அப்போ கோமாவுக்கு நீங்கள் விரோதியாகிவிட்டீர்களா......
:-)))))))))))))))))))

goma said...

சூடான டீ, சாய் நாற்காலி, பகோடா.


அதென்ன சூடான டீ ,அதான் சொல்லியாச்செ அப்புறம் என்ன சாய்[ஹிந்தியிலே வேற சொல்லணுமா...நாற்காலியைப் போய் யாராவது பிடிக்கும்னு சொல்வாங்களா?ஈசிசேர்ன்னு சொன்னா அர்த்தம் இருக்கு....:-))))))))

goma said...

2.சாப்பாட்டில் குறைகள் கூறுவது


எனக்கும் குறை சொல்பவட்களைக் கண்டாலே பிடிக்காது ...அப்படியே அவர்களைக் குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு போய் ,சுனாமி அழிவில் ரொட்டித்துண்டுகளுக்காகப் பரிதவிப்பவர்களைக் காட்ட வேண்டும் போல் தோன்றும்

goma said...

டயபட்டிஸ்
ஆனால் கடலை மிட்டாய் பிடிக்கும்.....
பிடித்த உணவு என்றுதானே கேட்டார்கள் ,சாப்பிடும் உணவு என்றா கேட்டிருந்தது ...என்று எஸ்கேப் பண்ணிவிடலாம் என்று நினைக்காதீர்கள் திவா....

goma said...

3. புதினா துவையல்.
------------------------
பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடுவேன்

goma said...

எழுதச்சொல்லி விட்டு பின்னூட்டம் இடவில்லையென்றால் எப்படி ...அதான் சும்மா தட்டி விட்டேன்

திவாண்ணா said...

//அப்போ கோமாவுக்கு நீங்கள் விரோதியாகிவிட்டீர்களா......
:-)))))))))))))))))))//
அட! கொய்யா ஜுஸ் குடிச்சதிலேந்தே!

திவாண்ணா said...

//ஈசிசேர்ன்னு சொன்னா அர்த்தம் இருக்கு....:-))))))))//
அதானே! அப்படி தமிழ்ல சொல்லாம ஏதோ சொல்லிட்டேன்!

திவாண்ணா said...

//எனக்கும் குறை சொல்பவட்களைக் கண்டாலே பிடிக்காது ...அப்படியே அவர்களைக் குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு போய் ,சுனாமி அழிவில் ரொட்டித்துண்டுகளுக்காகப் பரிதவிப்பவர்களைக் காட்ட வேண்டும் போல் தோன்றும்//

நல்ல சிந்தனை!

திவாண்ணா said...

//டயபட்டிஸ்
ஆனால் கடலை மிட்டாய் பிடிக்கும்.....
பிடித்த உணவு என்றுதானே கேட்டார்கள் ,சாப்பிடும் உணவு என்றா கேட்டிருந்தது ...என்று எஸ்கேப் பண்ணிவிடலாம் என்று நினைக்காதீர்கள் திவா....//

டயபெடிஸ் ன்னா இதெல்லாம் கூடவே கூடாதுன்னு ஒண்ணும் இல்லை. சமயத்திலே சக்கரை ரொம்ப குறைஞ்சா இதான் கை.. சாரி வாய் கொடுக்கும்!

திவாண்ணா said...

//3. புதினா துவையல்.
------------------------
பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடுவேன்//
you have been sufficiently punished!

திவாண்ணா said...

/எழுதச்சொல்லி விட்டு பின்னூட்டம் இடவில்லையென்றால் எப்படி ...அதான் சும்மா தட்டி விட்டேன்//
தான்கீஸ்! நானும் ஒவ்வொன்னுத்துக்கும் தனித்தனியா பதில் போட்டு நம்பரை அதிகமாக்கிட்டேன்! :-))

சகாதேவன் said...

6)//ஆபரேஷன் தியேட்டரில் ஆளுக்கு ஆள் அடிக்கும் ஜோக்குகள்//
ஆபரேஷனுக்கு வரும் பேஷண்டை சிரிக்கவச்சே மயக்கிடுவீர்களா/

9)//மேலே சொன்ன மூணுமே செய்து முடிக்ககூடியதுதான்//
நல்ல விஷயங்கள். செய்து முடியுங்கள். வாழ்த்துக்கள்.

சகாதேவன்

திவாண்ணா said...

//ஆபரேஷனுக்கு வரும் பேஷண்டை சிரிக்கவச்சே மயக்கிடுவீர்களா/
இல்லை சார். பேஷண்ட் எப்ப தூங்குவார்ன்னு பேஷன்டா இருப்போம். சிரிக்க ஆரம்பிச்சுட்டா அப்புறம் மயக்க முடியாது!

// நல்ல விஷயங்கள். செய்து முடியுங்கள். வாழ்த்துக்கள்.//
நன்றி!